Friday, August 5, 2011

ஆகஸ்டு 7, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 7, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு

1 Kings 19:9a, 11-13a
Ps 85:8-14
Roman 9:1-5
Matthew 14:22-33



மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 14

கடல்மீது நடத்தல்
(மாற் 6:45 - 52; யோவா 6:5 - 21)
22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ' ஐயோ, பேய் ' என அச்சத்தினால் அலறினர்.27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ' என்றார்.28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, ' ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் ' என்றார்.29அவர், ' வா ' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ' ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் ' என்று கத்தினார்.31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ' நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? ' என்றார்.32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ' உண்மையாகவே நீர் இறைமகன் ' என்றனர்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு ரொட்டி துண்டுகளையும், மீண்களையும் பல மடங்காக பெருக்கி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்த பின் , ஜெபம் செய்வதற்காக தனியே செல்வதை பார்க்கிறோம்.
நீங்கள் பெரிய விருந்தோ, அல்லது, பெரிய திட்ட வேலையை முடித்த பின், அல்லது கஸ்டமான காரியத்தை முடித்த பின்பு, ஆண்டவரோடு சிறிது நேரம் செல்வழித்து, அவரிடம் உங்களை அர்ப்பணித்து, அவர் உங்களுக்கு சேவையாற்ற கோரியதுன்டா?

தந்தை கடவுளிடம் அதிக நேரம் செலவழித்த பின்பு, இயேசு அந்த அனுபவத்தின் மூலம், தண்ணீரின் மேல் நடந்து செல்கிறார்!


இயேசு அடிக்கடி ஜெபம் செய்வார். நற்செய்தி வாசகங்களி கூறப்பட்டவைகளுக்கு அதிகமாகவே, அவர் ஜெபம் செய்திருப்பார். பிறகு ஏன் மத்தேயு இங்கே அவர் ஜெபம் செய்ய சென்றார் என்று கூறுகிறர். மத்தேயு மூலமாக, கடவுள் நமக்கெல்லாம், நல்ல சமமான விசுவாச வாழ்வில் நாம் இருக்க வேண்டும் என்று காட்டுகிறார்.


கடவுள் நம்மிடம் என்ன செய்ய சொல்கிறார் என்பதையும், நாம் இழந்த ஆற்றலையும் மீண்டும் பெற, நமக்கு ஜெப வாழ்வு தேவைபடுகிறது. நமது குடும்பத்தில், வேலையிடத்தில், சமூக குழுக்களில், பங்கு கோவிலில், எங்கெல்லாம் ப்ரச்னை ஏற்படுகிறதோ கடவுளுக்காக நாம் சில வேலைகள் செய்ய வேண்டும். நாமே நம்மை மற்றவர்களுக்கு கொடுக்கும்பொழுது, நாம் ஆற்றல் இழந்து விடுவோம்; கடவுளுக்கு உதவ நாம் ஆட்பட்டு, அதில் வளர்ந்தால், கடவுள் நம்மை , ஆற்றலை புதுபிக்க நாம் அனுமதித்தால், அவர் நிச்சயம் செய்வார். இது அப்படியே அடிக்கடி நமது ஜெப வாழ்வின் மூலம் நடந்து கொண்டிருக்க வேண்டும்.


நமக்கு வரும் நாட்களில் நடக்கும் எதையும் நாம் எதிர்நோக்கிட, நம்மை தயார் படுத்துவது ஜெப வாழ்வு தான். நாம் எங்கு நடந்து செல்கிறோம் என்பதை கூட நாம் தெரியாமல், ஜெப வாழ்வில் நம்மால் தைரியமாக செல்ல முடியும். நாம் தந்தை கடவுளோடு தனியாக அவரோடு நேரம் செலவிட்டு , என்ன நமக்கு கிடைக்கிறது என்றால், நமது நலன்களுக்காக தேவைபட்ட அன்பளிப்பும், மற்றவர்களின் தேவகளுக்கு நாம் சென்று நிற்கும்போது கொடுக்க வேண்டியவகளையும் கடவுள் நமக்கு கொடுப்பார். ஜெபம் நம் விசுவாசத்தை உறுதிபடுத்துகிறது. தண்ணீரில் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லிகொடுக்கிறது. கரையின் அக்கறைக்கு சென்று கடவுளின் உதவி தேவைபடுவோருக்கு உதவச் செய்கிறது. கடவுள் நம் மூலமாக அவர் களுக்கு உதவ ஆசைபடுகிறார். நீங்கள் ஜெபம் செய்து தயாராய் இருக்கிறீர்களா?


© 2011 by Terry A. Modica

No comments: