Friday, August 26, 2011

ஆகஸ்டு 28, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 28, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு

Jeremiah 20:7-9
Ps 63:2-6, 8-9
Rom 12:1-2
Matt 16:21-27

மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 16


இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மாற் 8:31 - 9:1; லூக் 9:22 - 27)
21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.22பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, ' ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது ' என்றார்.23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ' என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்றார்.24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.26 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய ஞாயிறின் முதல் வாசகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஜெரமிய இங்கே என்ன செய்கிறாரோ அதையே தான் நான் அடிக்கடி நினைப்பேன்.
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: " கடவுளே, இது நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். எனக்கு ஏன் இந்த சோதனை? " இது மாதிரி நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?

ஏன் கடவுள் நமக்கு இது மாதிரி நடக்க அனுமதித்தார்? கடவுள் நமக்கு கடினமான நிலைமை கொடுத்தாலும், ஏன் அவரை நம்புகிறோம்? இயேசுவை பின் சென்று , நமது உதவியையும், அன்பையும் மற்றவர்களுக்கு கொடுத்தாலும், நமக்கு இன்னல்களும், நமக்கு மன நிம்மதியின்றியும், மேலும் வலியுடையதாக இருக்கும்பொழுது, நாம் இன்னும் ஏன் இயேசுவை பின் செல்கிறோம்?

கடவுளோடு நடந்து, அவரது இறையரசிற்கு சேவை செய்வது என்பது ஒரு வீர செயலாகும். எதிர்பாரதது நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம், துரதிஷ்டவசமாக இவ்வேளகளில், துன்பப்படுதலும், - நம் சுய ஆசைகளை உதறிவிட்டு, சிலுவைகளை நாம் துக்க வேண்டியும், மேலும், இயேசுவை கல்வாரி மலை வரை பின் செல்ல வேண்டியிருக்கும், (ஆனால் அதிலிருந்து நாம் மீட்பை அடைவோம் - எல்லா நற்செய்திகளிலும், மீட்பு சொல்லப்பட்டிருக்கிறது).

நாம் கடவுளை அன்பு செய்வதால், இரண்டாவது வாசகத்தில் கூறியுள்ளது போல, நம்மையே அவருக்காக தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். இது தான் கடவுளை வணங்குவதில் உயர்ந்தது; திவ்ய நற்கருணையை அடுத்து, இவ்விசயத்தில் தான் நாம் கடவுளோடு தெய்வீக ஒன்றினைப்பில் சேர்கிறோம். யேசுவோடு நாம் ஒன்றினைந்து , நாம் திவ்ய நற்கருணையாகிறோம்.

எரேமியாவின் குற்றச்சாட்டு சொல்வது போல, கடவுளிடம் முறையிடலாம். எவ்வித தண்டனையுமின்றி, அவரோடு வேலை செய்ய நமக்கு பிடிக்க வில்லை என்று கடவுளிடம் சொல்லலாம். எனினும், குற்றம் கூறுதல் ஒரு பாவமாகும், ஏனெனில், இது வம்பளப்பதையும், கடவுள் மேல் தவறான எண்ணதையும் உருவாக்கும். அது கடவுளை தவறான கண்ணோட்டத்தில் காட்டும்.


நமது சோதனை காலங்களில், ஜெபத்தினால், நமக்கு துனை வேண்டி நாம் கேட்பது நமக்கு முக்கியம், மேலும், இதனை கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும். ஆனால், கடவுளை பற்றி மற்றவர்களிடம் குறை கூறும்பொழுது, நாம் எவ்வளவு குறைவாக கடவுளை நம்புகிறோம் என்பதை காட்டுகிறது. நமது தியாகத்தினால், வரும் நல்ல பலன்களை விரைவில் பார்ப்போம், அதனை தான் நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

© 2011 by Terry A. Modica

No comments: