Friday, May 4, 2012

மே 6, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 6, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 5ம் ஞாயிறு

Acts 9:26-31
Ps 22:26-28, 30-32
1 John 3:18-24
John 15:1-8

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 15

இயேசுவே உண்மையான திராட்சைச் செடி
1 ' உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.2 என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.6 என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் பார்ப்பது போல், நல்ல கணி கொடுக்கும் திராட்சை செடியாக, கிறிஸ்துவோடு இனைந்து இருக்கிறோம். இயேசுவும் ஒரு திராட்சை கொடி, அவரோடு நாமும் இனைந்து இருப்பதால், நாமும் அவரை போலவே அழைக்க பட்டிருக்கிறோம். நாமும் நல்ல கனிகளை தரவேண்டும். இயேசு கொடுத்த அதே கனிகளை தரவேண்டும்.


எனினும், நம்மில் பலர், இது எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்து கொள்வதில்லை! கிறிஸ்துவின் கனிகளை கொடுப்பதை  நிதர்சனம் செய்யாமல் அதனை முக்கிய கடமையாக எடுத்து கொள்ள வேண்டும். தற்காலத்தில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள், சாதாரண கிறிஸ்தவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். கிறிஸ்தவர்களாக இருப்பதால் நமக்கு ஒரு நிறைவு இருக்கிறது. சில மனிதர்களுக்கு மட்டும், இரக்கத்தையும், தாராள குணத்தையும், அன்பையும் கொடுப்பதால், கடவுள் நம் செயல்களினால் திருப்தி அடைந்துவிட்டார் என நாம் நினைக்கிறோம்.
ஏன் இவ்வுலகில் அதிக கெட்டதும்  , தீமைகளும் நடக்கின்றன? என்ற கேள்வியை கேட்டதுண்டா? போரை அடக்கியும், ஊழலை ஒழித்தும், மிகப்பெரிய பனக்காரர்களின் கொட்டங்களை அடக்கியும், கடவுள் இவ்வுலகில் அமைதியை நாட்டவில்லை? என்ற கேள்வி நமக்கு எழலாம். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிரான சட்டங்களையும், கிரிமினல் குற்றங்களையும், ஏன் கடவுள் நிறுத்துவதில்லை என்ற கேள்வியும் நமக்கு எழுகின்றது
ஏன் கடவுள் ஏதாவது செய்வதில்லை?
கண்டிப்பாக அவர் செய்கிறார்! எனினும், திராட்சை செடிகளை வளர்ப்பது போலவே செய்கிறார். திராட்சை கொடிகள் ஒவ்வொரு கொடியாக சென்று கிளை கிளையாக கனிகள் கொடுப்பது போல நாமும் மற்ற கிறிஸ்தவர்களும் கனிகளை கொடுக்க வேண்டும். கிறிஸ்துவின் கொடியிலிருந்து நாம் சக்தியை பெற்று நாம் கனிகளை கொடுக்க வேண்டும். ஆனால் அந்த கனிகள் அந்த கொடியிலேயே இருக்க கூடாது.


இவ்வுலகிற்கு கொடுப்பதற்காக கிறிஸ்து பல பழங்களை உங்கள் மூலம் கொடுக்கிறார். இன்னும் பலத்துடனும், சக்தியுடனும், நமது கிளைகளை படர விட்டு, கிற்ஸ்துவிடம்  நாம் பெற்ற அத்தனையையும் மற்றாவர்களிடம் பகிர வேண்டும்.
ஓரளவிற்கு கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் இவ்வுலக இறைசேவையை செய்தால், தீமைகளை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர முடியும். தீமையின் மேல் வெற்றியை கிறிஸ்து கொண்டு வருவார். இவ்வுலகில் புனிததன்மை, கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியின் மூலம்  நாம் பெற்று , நம் புனித தன்மை மூலம் இவ்வுலகை புனிதமாக்குவோம்.

© 2012 by Terry A. Modica

No comments: