Friday, May 3, 2013

மே 5, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 5, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 15:1-2, 22-29
Ps 67:2-3, 5-6, 8
Rev 21:10-14, 22-23
John 14:23-29

23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: ' என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். 27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.28 ' நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன் ' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் குறிப்பிட்டு உள்ளது போல, யேசுவை அன்பு செய்வது என்பது, அவரது போதனைகளையும், கட்டளைகளையும் கீழ்படிந்து வாழ்வது , அவரை பின்பற்றுவது.  நமது இதயம் தொட்டு, இதனை செய்ய விரும்புகிறோம். அவரை போலவே வாழ்ந்து அவருக்கு மரியாதை செய்ய விரும்புகிறோம். இயேசுவை அன்பு செய்வது போலவே அன்பு செய்ய ஆசைபடுகிறோம். இதனையெல்லாம் செய்கிற பொழுது, கடவுள் நம்மில் நீடித்து இருப்பார் என்பதையும் அறிவோம்.

எனினும், இது ஒன்றும் சுலபமானது அல்ல. ஒவ்வொரு நாளும் இயேசுவின் வழியில் வாழ்வதற்கு நமக்கு பல சவால்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் இயேசு என்ன மாதிரி செய்திருப்பார் என்பதை  நாம் மறந்து விடுகிறோம் அல்லது, எப்படி அந்த தருணத்தை எதிர்கொள்வது என்பது நமக்கு தெரியாமல் போகிவிடுகிறது. மனிதர்கள் நம்மை தாக்கும்பொழுதோ,  அவர்களின் தவறுகளால், தோல்வியினால், அன்பில்லாமால் செய்யும் செய்கைகளால், நாம் அதற்கு எப்படி திருப்பி எதிர் செயல் செய்யலாம் என பாவ செயல்களுக்குள்ளாகிறோம். ஒவ்வொரு செயல்களுக்கு, சூழ்னிலைக்கும், யேசு எப்படி எதிர்கொள்வார் என்று நற்செய்தியில் குறிப்பிட படவில்லை. “இப்படி ஒரு சூழல் வந்தால் இவ்வாறு செய்யுங்கள், கடவுள் கொள்கை #127” என்ரு எங்கும் குறிப்பிடவில்லை.


அதனால் தான், யேசு நமக்கு பரிசுத்த ஆவியை வழங்குவேண் என்று வாக்குறுதி அளிக்கிறார். இயேசுவின் பரிசுத்த வழிகளை நமக்கு நினைவுபடுத்த பரிசுத்த ஆவியார் இங்கே இருக்கிறார். ஒவ்வொரு முறை நாம் நல் வழிக்கான சவால்களை சமாளிப்பதற்கு, காலை எழுவது முதல், மாலை தூங்க்கும் வரை நம்மோடு பரிசுத்த ஆவியார் இருக்கிறார்.

அப்புறம் என்ன? கிறிஸ்துவின் கட்டளைகளை  நாம் கடைபிடிப்பது ஒன்றும் பெரிய ப்ரச்சினையில்லை.ப்ரச்சினை என்ன என்றால், பரிசுத்த ஆவியை நாம் எப்போதும் சார்ந்து இருப்பதற்கு நாம் மறந்து விடுகிறோம். அவருடைய வழி காட்டுதலை அறிந்து கொள்ள நமக்கு தெரிவதில்லை. கடவுளுடைய முழு உதவியும் நமக்கு இருக்கிறது. ஆனால், நமது இவ்வுலக ப்ரச்சினைகளை நாமே எதிர்கொள்ள வேண்டும்  என்ற நினைப்பில் நாம் அவைகளை எதிர்கொள்கிறோம். பரிசுத்த ஆவியின் துனையோடு, அவரது வழிகாட்டுதலோடு, நாம் எப்பொழுதும் இருக்க இந்த செய்முறை பயிற்சியை கடைபிடியுங்கள்: ஒவ்வொரு மணி   நேரத்தையும் புனிதபடுத்துங்கள், அதனை நினைவுபடுத்த, உங்கள் கடிகாரத்திலோ, அல்லது, போனிலோ ஒவ்வொரு மணிக்கும் அலாரம் வைத்து கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம், அந்த மணி அடிக்குதோ, அப்பொழுது, பரிசுத்த ஆவிக்கு நன்றி கூறி, அவர் உங்களை வழி நடத்துவதற்கும், அடுத்த 60 நிமிடத்திற்கு உங்களை வழி நடத்துவதற்கும், அவருக்கு நன்று கூறுங்கள். மேலும், கடவுள் நம்மிடையே இருக்கிறார் என்ற எண்ணத்துடன் இருந்து, அவர் நமக்கு எப்போதும் உதவி செய்ய தயாராய் இருக்கிறார் என்ற எண்ணத்துடன் நாம் இருப்போம்.
© 2013 by Terry A. Modica

No comments: