Saturday, May 11, 2013

மே 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 7ம் ஞாயிறு
Acts 7:55-60
Ps 97:1-2, 6-7, 9
Rev 22:12-14, 16-17, 20
John 17:20-26
யோவான் நற்செய்தி,
அதிகாரம் 17:20-26
 20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். ' 24 ' தந்தையே, உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன். ' (thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி ஒற்றுமையின் நற்செய்தி. இயேசு விண்ணகத்திற்கு தன்னை அர்ப்பணித்து அதன் பிறகு, தன்னை சிலுவை மரணத்திற்கு அர்ப்பனித்தார். இயேசுவும் தந்தை கடவுளும் ஒன்றானது போல, நாம் ஒருவரோடு ஒருவர் ஒன்றாய் இருந்து ஒற்றுமையின் சாட்சியாய் – தியாகம் செய்து, நிபந்தனையற்ற அன்புடன், அர்ப்பணிப்போடு – கடவுளை போல நாமும் இருக்கிறோம் என்று இவ்வுலகத்திற்கு காமிப்போம். கடவுளின் அன்பு நிஜம் என்று இந்த உலகிற்கு கான்பிப்போம். இது நிரந்தரமானது, அர்ப்பனிப்புடன், கூடிய நிபந்தனையற்ற, தியாகத்துடன் உள்ள அன்பாகும். யார் எவ்வளவு பாவம் செய்தாலும், இந்த அன்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.

திருவருட்சாதன திருமணம், இந்த உலகிற்கு  ஒற்றுமையின் சான்றை காட்டுகிறது. கடவுள் எவ்வாறு நிபந்தனையற்ற அன்பை நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும்,  நோயுற்றவர்களுக்கும், வளமோடு வாழ்பவர்களுக்கும், ஏழைக்கும், பணக்காரனுக்கும், முழுமையான அன்பை கொடுப்பது போல, திருமணமான ஆனும் பென்னும்,அன்பை பரிமாறி கொள்கினறனர். திருமண வாழ்வின் அன்பு தீவிர அன்பாக இருக்கும். இதனை திருமண வாழ்வை விட்டு வெளியே அனுபவிக்க முடியாது. இந்த சடங்கில், புனித திருமண வாழ்வில் கணவன் அவனது வாழ்வை மனைவிக்காக கொடுக்கிறான். மனைவி அவளது வாழ்வை விட்டு, கணவனுக்காக வாழ்கிறாள். கிறிஸ்து அவரது வாழ்வை நமக்காக கொடுத்தது போல. நாம் திருச்சபையுடன் கிறிஸ்துவின் மணப்பெண்ணாக நமது வாழ்வை கிறிஸ்துவிற்காக கொடுத்து அவருக்காக இறைசேவையை செய்வோம்.


திருமணம் புனிதமானது! விவாகரத்தானவர்களுக்கு முழுமையான விசாரனை இல்லாமல், கத்தோலிக்க குருமார்கள் திருமணம் செய்து வைப்பதில்லை. கணவன் மனைவி ஒற்றுமை புனிதமானது, இயேசுவின், கடவுள் தந்தையின் உறவு போல புனிதமானது. கடவுள் கொடுத்த திருமணமும், கடவுள் அன்பி/ற்கு இலக்கணமாக இருக்கிறது.

மற்ற உறவுகளும் – கடவுளால் ஏற்படுத்தபட்டவை – புனிதமானது தான். கடவுளால் உருவாக்கபட்ட அனைது உறவுகளும் புனிதமானது தான். இயேசுவின் தியாகத்தின் அன்பை இந்த உறவுகளளெல்லாம்,உலகிற்கு எடுத்து காட்டுகின்றன.
ஆனால், இவ்வுலகில், கிறிஸ்துவின் உடல், இந்த திருச்சபை , எப்படி பிரிந்து இருக்கிறது, மக்கள் மணம் மாறுதல் எதிர்ப்பாக இருக்கிறது.!


© 2013 by Terry A. Modica

No comments: