Saturday, May 25, 2013

மே 26 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 26 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Rom 5:1-5
John 16:12-15

12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.
(thanks to www.arulvakku.com)

கடவுள் உங்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இருப்பதை உங்களால் உணர முடியவில்லை. நீங்கள் இயேசுவிடம் கேட்டு இன்னும் அவர் பதில் அளிக்காமல் இருப்பது எது?  திருச்சபையின் போதனைகளில், எது உங்களுக்கு புரியாமலோ அல்லது அதனை ஏற்று கொள்ளாமல் இருப்பது எது? இன்றைய நற்செய்தியில், இயேசு,
“' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.” என்ற் சொல்கிறார்.

ஏன் நம்மால் தாங்க இயலாது? ஏனெனில், முதலில் பரிசுத்த ஆவி நம்மை தயார் படுத்த அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்மில் முதலில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த மாற்றத்திற்கு நாம் அனுமதித்தால் தான், உண்மை நமக்கு கடினமாக தெரிந்தாலும், அது ஆசிர்வாதமாக ஆகும். ஆனால் நாம் இந்த மாற்றத்திற்கு அனுமதிப்பதை  மிகவும் தயங்கியே செய்கிறோம்.

இயேசு சொன்னது அனைத்தும், தந்தை கடவுளிடமிருந்து பரிசுத்த ஆவி மூலமாக வந்தது. கடவுள் அதே ஞானத்தையும், உண்மையையும், நமக்கு கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த அன்பளிப்பு, நாம் நம்மையே கடவுளுக்கு அர்ப்பனித்து, மாற்றத்தை உண்டாக்க  நாம் அனுமதித்தால் தான், நமக்கும் இந்த அன்பளிப்பு கிடைக்கும். மூவொரு கடவுள்களில், தந்தை கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார், அந்த மன்னிப்பை, இயேசு நமக்கு கொண்டு வருக்றார், பரிசுத்த ஆவியானவர், நம்மை தூய்மைபடுத்தி, பாவமில்லாமல் வாழ நமக்கு உறுதுனையாக இருக்கிறார்.

பாவ சங்கீர்த்தனத்தில், குருவானவர் இயேசுவின் ப்ரசன்னமாகவும், திருச்சபையின் முழு உடலாகவும் இருக்கிறார். பாவ மன்னிப்பு, பரிசுத்த ஆவியின் செயலாகும். இச்செயல், பாவங்களை மட்டும் கழுவாமல், பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்கவும் உதவுகிறார். பாவ சங்கீர்த்தன அருட்சாதனம், மூவொரு கட்வுளின் நேரடி செயலாகும், அவர்கள் மூவரும், நம் மணம் வருந்துதலை ஏற்ற்கொண்டு, நம் பரிசுத்த வாழ்வை இன்னும் மேம்படுத்துகின்றனர்.

இந்த அருளை பெறுவதற்கு, கடவுளோடு இனைந்து, நம்மை முழு மாற்றத்திற்கு தயார் படுத்த வேண்டும். தாழ்மையுடன் இருந்தால், போதனைகள் நம்மை மாற்றத்திற்கு கொண்டு ச்எல்லும்.
© 2013 by Terry A. Modica

No comments: