Friday, May 17, 2013

மே 19, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 19, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தூய ஆவியாரின் பெருவிழா
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)


இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று இயேசு கூறுகிறார். அதுவும் இரண்டு முறை கூறுகிறார். முதலில், அவருடைய சீடர்களுக்கு, அமைதியின் அன்பளிப்பை கொடுத்து, அவர்களுடைய பயத்தை, கவலையை போக்குகிறார், அதன் மூலம், இயேசுவை அவர்களால் கண்டு கொள்ள முடிகிறது.

பிறகு, மீண்டும் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று கூறி, அவரின் இறைசேவையை அவர்கள் தொடர அவர்களை இவ்வுலகுக்கு அனுப்புகிறார். கடவுளுக்காக இவ்வுலகில் இறைசேவையை தொடர்ந்து பரிசுத்த ஆவியின் முழுமையான வாழ்வில் வாழ்ந்து அதன் பலனை பெற சீடர்களை அனுப்புகிறார்.

இதன் மூலம், இயேசு  நம்மோடு இருக்கிறார் என்று அறிந்து நாம் அமைதியுடன் கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால், இது ஒரு சவால் தான், இயேசுவை பற்றி மற்றவர்களிடம் பேசும்பொழுது, நாம் அமைதியாக இருப்பது, எவ்வித கலக்கமும் இல்லாமல் இருப்பது என்பது ஒரு சவால் தான். மேலும், நம்மை அவர்கள் கேலிக்குள்ளாக்குவார்கள், நிராகரிப்பார்கள் மற்றும், நமக்கு போதிய அறிவு கிடையாது என்றும் நாம் நினைத்து பயந்து ஒதுங்கலாம், இதற்காகதான், இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.

கடவுள் எதனை செய்ய சொல்கிறாரோ, அதனை செய்ய தேவையான அனைத்தையும், பரிசுத்த ஆவி நமக்கு தருகிறார். அதன் மூலம், நமக்கு எந்த குறையும் கிடையாது. மேலும், நம்மை நிராகரிக்கிறவர்களிமிடமிருந்து, நமக்கு தேவையான ஆறுதலையும், பாதுகாப்பையும் கொடுக்க கடவுள் தவறுவதில்லை.

வெளியில் என்ன நடந்தாலும், நம்மில் உள்ள்த்துக்குள், உள்ள ஆழ்ந்த அமைதி, நாம் பரிசுத்த ஆவியின் ஆற்றலுடன் இனைந்து இருப்பதன் பலனாகும். மற்றவர்கள் நமக்கு என்ன செய்தாலும், நற்செய்தியை அவர்களோடு பகிர்ந்து கொள்ளும்பொழுது, அவர்கள் எதிர்மறையான விமர்சனங்களுடன் எதிர்தாலும், நம்மில் ஒரு ஆழ்ந்த அமைதி பரிசுத்த ஆவியின் துனையுடன் இருப்போம். பரிசுத்த ஆவியின் வாழ்வதற்கான அடையாளம், நாம் அமிதியுடன் இருப்பது தான். அமைதி தான் பரிசுத்த ஆவியானவர் உயிர்ப்புடன் இருக்கிறார் என்பதை காட்டுகிறது.

நற்செய்தியின் முடிவில், இயேசு சீடர்களுக்கு (கத்தோலிக்க திருச்சபையின் முதல் குருக்கள்), பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கி , தெய்வீக ப்ரசன்னைத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று கூறுகிறார். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தை, உருவாக்கி, குருவின் மூலம், இயேசுவே நம்மில் வருகிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

இந்த பாவம் நிறைந்த உலகில், பரிசுத்த ஆவியின் ஆற்றல், நம்மை அமைதியோடு இருக்க செய்கிறது. மன்னிபது கூட நமக்கு கடினம் தான், ஆனால் கிறிஸ்துவின் ஆவியுடன் இனைந்து நம்மால் மன்னிக்க முடியும். நம்மை காயபடுத்துபவர்களை, நம்மால் மன்னிக்க முடியும். அவர்கள் திருந்தாவிட்டால் கூட, நம்மால் மன்னிக்க முடியாது.  பரிசுத்த ஆவி தான் நம்மை ப்ரச்சினைகளுக்கு இடையேயும், ஆழ்ந்த அமைதியை தருகிறது.
© 2013 by Terry A. Modica

No comments: