Friday, May 31, 2013

ஜூன் 2 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 2 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா
Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17

லூக்கா நற்செய்தி
11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள்.14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார்.15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
(thanks to www.arulvakku.com)

“அன்பானது, இரண்டு மீன்களுக்கும், 5 அப்பங்களுக்கும் ஒப்பானது. அது சிறியதாக இருந்தாலும், கொடுக்க ஆரம்பித்த பின்பு, பல மடங்காக மாறிவிடும்.”  கலிலேயா கடலின் வடக்கு புறத்தில் உள்ள கோவிலில், இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான், இயேசு இந்த உணவை பல மடங்காக பெருக்கு அங்கே வந்தவர்கள் அனைவருக்கும் உணவு வழங்க்கினார்.


அந்த கோவிலின் பீடத்தில், மொசைக் கல்லினால் செய்யப்பட்ட பிரெட் துண்டுகளும், மீணும் உள்ளன. இது கி.பி, 480ம் ஆண்டு செய்யப்பட்டது. இயேசு அந்த உணவை ஆசிர்வதித்த மலைக்கு அருகிலேயே இந்த பீடம் உள்ளது. அந்த மொசைக் கல்லில் 4 ரொட்டி துண்டுகள் தான் உள்ளது. ஏன் 5 துண்டுகளுக்கு பதிலாக 4 இருக்கிறது. ?
அந்த 5வது ரொட்டி துண்டு தினமும் திருப்பலியில் திவ்ய நற்கருணையாக வருவதை குறிக்கிறது. இதனை இந்த வெப் சைட்டில் நீங்கள் பார்க்கலாம்.


இயேசுவின் உண்மையான இயற்கையான, ப்ரசன்னத்தைவிட , திவ்ய நற்கருணை மேலானது  கிறிஸ்துவின் உடலாக உள்ள திருச்சபையின் சமூகத்தை விட மேலானது. இது தெய்வீக அற்ப்தமாகும். பல மடங்காக பெருகும் கடவுளிடமிருந்து வர வேண்டிய எதுவும், திவ்ய நற்கருணையில், இயேசுவாக பரிசுத்த ஆவி மூலம் நாம் பெறுகிறோம். திருப்பலியில் நாம் பங்கு கொள்ளும் பொழுது, நாம் திவ்ய நற்கருணயாக பெறுகிறோம். அப்பொழுது, இயேசுவிடம், நம் குறைகளை களைந்து, தேவையான திறமைகளை பல மடங்காக பெருக்க அவரிடம் வேண்டுவோம்.

இயேசு நமக்கு தேவையானதை கொடுப்பார், அதையும் சரியான நேரத்தில், எந்த வழியில் கொடுக்க வேண்டுமோ, அவ்வழியில் கொடுப்பார் என்று நாம் நம்பலாம்.

உங்களுக்கு போதுமான அன்பு உங்கள் வாழ்வில் கிடைக்கிறதா? பெரும்பாலும் நாம் இல்லை என்று தான் சொல்வோம். கடவுளை தவிர யாருமே நமக்கு முழுமையான அன்பை கொடுப்பதில்லை. எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அவரின் அன்பு கடவுளின் அன்பிற்கு ஈடாகாது. அவர்கள் கிறிஸ்துவிற்கு நெருக்கமாக இருந்தாலும், கடவுளின் அன்பே மேலானது.

கடவுளின் தூய்மையான, முழுமையான அன்பு திவ்ய நற்கருணை மூலமாக நேரடியாக நமக்கு கிடைக்கிறது. இந்த திவ்ய நற்கருணையோடு நாம் எப்படி இனைவது என்று புரியாமல் நாம் இருப்பதால் தான், கடவுளின் முழுமையான அன்பை நாம் உணர்வதில்லை. திவ்ய நற்கருணை, மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் அன்பை குறிப்பதாகும். நீங்கள் போதுமான அன்பை பெறவில்லை எனில், அதிகம் அன்பை கொடுங்கள். எந்த அன்பை பெற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ, அந்த அன்பாக இருங்கள். மற்றவர்களுக்கு திவ்ய நற்கருணையாக இருங்கள்.

© 2013 by Terry A. Modica

No comments: