Tuesday, April 24, 2007

ஏப்ரல் 25 2007 மறையுரை

ஏப்ரல் 25 2007

Good News Reflection
Wednesday of the Third Week of Easter
April 25, 2007
Feast of Saint Mark, evangelist

Today's Readings:
1 Peter 5:5b-14
Ps 89:2-3, 6-7, 16-17
Mark 16:15-20
பேதுரு திருமுகம் (1 இராயப்பர்)

அதிகாரம் 5

5 இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். 6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்: அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். 7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. 9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? 10 எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். 11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். 12 நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். 13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். 14 அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 16

15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)



மறையுரை:

எந்த அடையாளங்கள் உன்னோடு சேர்ந்தே இருக்கிறது?

யேசு இன்றைய நற்செய்தியில், "இந்த மாதிரியான அடையாளங்கள்" கிறிஸ்தவர்களாகிய உங்களோடு சேர்ந்து வரும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பல அற்புத அடையாளங்களில் பட்டியலிடுகிறார். மேலும் பல வியப்ப்டைய செய்யும் அடையாளங்களை பைபிளில் பல்வேறு இடங்களில் எடுத்துரைக்கிறார். இன்னும் புதிய ஏற்பாட்டில்,இன்றைய முதல் வாசகத்தில் பார்ப்பது போல, நாம் பல கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வரும் எடுத்து காட்டுகளை பார்க்கிறோம்,

எந்த விதமான ஆச்சரியமான அடையாளங்களும், நம்முடைய சுய தம்பட்டங்களுக்கோ அல்லது, நம்மின் சுய சந்தோசங்களுக்காக பயன்படுத்தகூடாது. அல்லது நமது வாழ்க்கையை சுலபமாக்கவோ பயன்படுத்தகூடாது. எப்போத்மே அவைகள் எல்லாம், மத /மன மாற்றத்திற்கு உதவ கூடிய கருவியாகும்.


உங்களுடைய தினசரி வாழ்வில், என்ன மாதிரியான அடையாளங்கள் சேர்ந்தே இருக்கின்றன? (ஒ, நான் தினசரி வாழ்வு என்று குறிப்பிட்டேன், ஆம் இது ஒரு சவால்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமிருந்து உங்களை எது குறிப்பிடபடும்படி வேறுபடுத்துகிறது. இந்த வார்த்தை "பரிசுத்தம்" என்பது, இவ்வுலகிலிருந்து வேறுபட்டதாகும். கடவுளரசிற்கு சொந்தமானது. இது "தெய்வீகம்" அல்லது "மிக சரியான" என்ற வார்த்தைகளிலிருந்து மாற்று அர்த்தம் கொண்டது.


நீ பரிசுத்தமானவனா? அல்லது புனிதமானவனா? ஆமாம், நீ பரிசுத்தமானவன் தான். நான் உங்களுக்கு விளக்கி சொல்கிறேன். புனித வாழ்க்கையை விட்டு விலகி வாழ்கிறீர்களா? ஆமாம், நீங்கள் அவ்வாறு நடந்து கொள்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட வேறு மாதிரி நடந்து கொண்டாலும். நீங்களும், நானும் இன்னும் மிக சரியான பரிசுத்தத்தை பெறவில்லை.

நாம் இன்னும் சரியாக நம் புனிதத்தை அடையவில்லை. (மேலும், நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை அடைந்து அதை முடித்த பின்பு தான், நாம் இந்த பரிசுத்தத்தை அடைய முடியும்) இருந்தும், நாம் பரிசுத்தமானவர்கள். நாம் மேலும் எப்படி இதில் உறுதியாக இருக்க முடியும்.? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார். நம்முடைய ஞான்ஸ்நானத்தில், நாம் பரிசுத்த மானவர்கள் ஆனோம், உறுதிபூசுதலில் அதனை மீண்டும் புதுபித்து, பரிசுத்த ஆவ்யின் மேல் உள்ள நம்பிக்கையை, பரிசுத்த வாழ்வில் மேலும் வளர்கிறோம்.

நம்முன் தற்போது உள்ள கேள்வி: மற்றவர்களுக்கு நாம் பரிசுத்தமானவர்கள் அல்லது தெய்வீகமானவர்கள் என்று எப்படி தெரியும்.? உனது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ எப்படி தெரியும். அல்லது உங்களோடு வாழ்கின்றவர்களுக்கு எப்படி தெரியும். உனது முதலாளி அல்லது மேலாளருக்கு எப்படி நீ பரிசுத்தமானவன் என தெரியும். நீ மாணவனாக இருந்தால், உனது ஆசிரியருக்கு தெரியுமா? உனது குருவானவருக்கு தெரியுமா? உனது அருகாமையில் வசிப்பவருக்கு தெரியுமா? உனது நண்பர்களுக்கு தெரியுமா? உங்களது ஏரியாவில் இருக்கு கடைக்காரர்களுக்கு தெரியுமா? கோவிலில், நீங்கள் ஒன்ரோடொன்றாக கலந்து ஜெபத்திலும், மற்ற சேவைகளிலும் கலந்து கொள்வோருக்கு, நீங்கள் பரிசுத்தமானவர் என்று தெரியுமா?

கடைசி கேள்வியால், நீங்கள் ஆச்சரியபடவேண்டாம். பிரிவுகளும், அநீதிகளூம் பங்கு வாழ்க்கையிலும் உள்ளதால், நாம், கிறிஸ்தவர்கள் நாம், நிறைய உழைத்து, தெய்வீகத்தில் வளர வேண்டும்.

கிறிஸ்துவில் நாம் கொண்ட விசுவாசம், மற்றவர்களுக்கு தெரிய வேண்டும், நம்மோடு உள்ள அடையாளங்களால், அவர்களை மத மாற்றம் செய்யவேண்டும். --கடவுளின் அடையாளங்கள், நம்மிடம் இருக்கிறது. அவரது அன்பு, இரக்கம், ஞானம், பொறுமை, அவரின் மன்னிப்பு, தாழ்மை, குணப்படுத்தும் குணம், அவரது ஆச்சரியங்கள் அனைத்தும் நம்மில் இருந்து, இந்த உலகிற்கு, நம்மை வேறுபடுத்தி காட்டுகிறது.

மக்களுக்கு நீ கிறிஸ்தவன் என்று எப்படி தெரியும்.?

No comments: